Homeசெய்திகள்சினிமாநாளை தொடங்கும் 'கூலி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

-

- Advertisement -

கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நாளை தொடங்கும் 'கூலி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான், கேமியா ரோலில் நடிப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை தொடங்கும் 'கூலி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!அதன்படி ஏற்கனவே ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தது நாளை சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர் ரஜினி, ஓய்விற்கு பிறகு நாளை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ