spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசலார் 2 கைவிடப்பட்டதா?... படக்குழு கொடுத்த விளக்கம்...

சலார் 2 கைவிடப்பட்டதா?… படக்குழு கொடுத்த விளக்கம்…

-

- Advertisement -
சலார் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. 
கேஜிஎஃப் படங்களின் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சலார். ஹாம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். பிருத்விராஜ், பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழியில் வெளியானது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வௌியான சலார் திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பையும் பெற்றது. இதைத் தொடர்ந்து சலார் இரண்டாம் பாகத்தின் பேச்சு அடிபடத் தொடங்கியது. அதன்படி, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை இல்லை.
இத்திரைப்படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கின்றனர். படத்தில் கியாரா அத்வாணி இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரபாஸூக்கும் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு சலார் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக தகவல் வௌியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழு, இயக்குநரும், பிரபாஸூம் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

MUST READ