spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடீப் ஃபேக் வலையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

டீப் ஃபேக் வலையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

-

- Advertisement -
AI தொழில்நுட்பம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானது என்று டெஸ்லா நிறுவனரும், டிவிட்டர் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த AI தொழில்நுட்பம் மூலம் ஒருவர் முகத்திற்கு பதிலாக மற்றொருவர் முகத்தை வைத்து உருமாற்றம் செய்யலாம். இது டீப் ஃபேக் என்று அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அண்மைக் காலத்தில் தவறான பாதையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபமாக திரைப்பட நடிகைகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவை குறித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டனர். அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியின் வீடியோவை ராஷ்மிகா போல ஆபாசமாக சித்தரித்து வீடியோ வௌியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனா மட்டுமன்றி கோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோலை வைத்து டீப் பேக் வீடியோ உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அதையடுத்து, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அலியா பட்டின் புகைப்படத்தையும் தவறாக சித்தரித்து டிரெண்ட் செய்தனர். இந்நிலையில் டீப் ஃபேக் விவகாரத்தில் பிரபல நடிகையும், தொழிலதிபருமான பிரியங்கா சோப்ராவும் சிக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ப்ரமோஷன் விழாவில் பங்கேற்று தனது ஆண்டு வருமானத்தை கூறி விளம்பரம் செய்வது போல பிரியங்கா சோப்ராவின் வீடியோ டீப் பேக் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ