நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. எனவே அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
#D55ByGopuramFilms 🔥
Happy & excited to announce that #GopuramFilmsProductionNo7 is #D55 ❤️Updates parakuthaa.. Next photo set dropping soon#GNAnbuchezhian @dhanushkraja @Rajkumar_KP @Sushmitaanbu #Vetrimaaran @Gopuramfilms @Gopuram_Cinemas @TeamaimPR @thetabsofficial… pic.twitter.com/RnlgtiZKPn
— Gopuram Films (@gopuramfilms) November 8, 2024
அதன்படி ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 8) சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.