தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி போகும் எனும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தேனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில் இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சமீப காலமாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இப்படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படக்குழு வெளியிடும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் ஏப்ரல் 10ஆம் தேதி வருவதை உறுதி செய்து வருகின்றனர். எனவே இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.