நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா, தொழிலதிபராகவும் வலம் வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கையும் தொடங்கி தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,” எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்ணில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா வெளியிட்ட இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயிருக்கும் நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
- Advertisement -