spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது கல்லூரியை மையமாகக் கொண்ட படம்.... 'STR 49' குறித்து இயக்குனர் பேட்டி!

இது கல்லூரியை மையமாகக் கொண்ட படம்…. ‘STR 49’ குறித்து இயக்குனர் பேட்டி!

-

- Advertisement -

STR 49 படம் குறித்து இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.இது கல்லூரியை மையமாகக் கொண்ட படம்.... 'STR 49' குறித்து இயக்குனர் பேட்டி!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் சந்தானம், கயடு லோஹர், விடிவி கணேஷ் ஆகியோர் சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளனர். இது கல்லூரியை மையமாகக் கொண்ட படம்.... 'STR 49' குறித்து இயக்குனர் பேட்டி!சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் 2025 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “இப்படம் சென்னையில் உள்ள கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. சிம்பு இப்படத்தில் ஸ்டைலிஷான லுக்கில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிம்புவின் மன்மதன், வல்லவன் ஆகிய படங்களில் அவர் கல்லூரி மாணவராக நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது கல்லூரியை மையமாகக் கொண்ட படம்.... 'STR 49' குறித்து இயக்குனர் பேட்டி!அதனால் இந்த படம் Gen Z கிட்ஸ்களுடன் இணைக்க உதவும். எனக்கு இந்த யோசனை வந்தபோது சிம்புவுக்கு இது நன்றாக வேலை செய்யும் என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அவருக்கு என்னுடைய ஸ்கிரிப்ட்டை விவரிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கும் இது பிடித்திருந்தது. இது எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ