நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களிலும் கலக்கி வருபவர். அந்த வகையில் ஷாருக்கான் உடன் இவர் இணைந்து நடித்திருந்த ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வாசல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் நயன்தாரா, மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நயன்தாரா, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷுக்கு அக்காவாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவி வந்தது. அதன்படி கீது மோகன் தாஸ் இயக்கி வரும் இந்த படமானது அக்கா – தம்பி இருவருக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து சென்டிமென்ட் படமாக தயாராக இருக்கிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தான் தற்போது நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். எனவே இந்த படத்தில் நடிகை நயன்தாரா அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டிருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் ஏற்கனவே நயன்தாராவிற்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா டாக்ஸிக் படத்திற்காக பேசி இருக்கும் சம்பளம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.