Homeசெய்திகள்சினிமாடப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

டப்பிங் யூனியன் தேர்தல்….. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

-

எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன். 40 வருடமாக கூட இருந்தும் ஏன் ஒருமுறை கூட சொல்லவில்லை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி!

லியோ பட விவகாரத்தில் லோகேஷ் தான் (அபராதம்) கொடுக்க வேண்டும் என்று இல்லை. பாவம் அவருக்கும் விதிமுறைகள் தெரியாது. நான் போன் பண்ணி சொன்னதும் ஒப்பு கொண்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் ராதாரவி பேச்சு!டப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், டப்பிங் யூனியன் தேர்தல் தொடர்பாக தலைவரும் நடிகருமான ராதாரவி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

இந்த முறை நடக்கும் டப்பிங் யூனியன் தேர்தலில் நான் தலைவருக்கு போட்டியிடுகிறேன். மொத்தம் 1645 வாக்குகள் இருக்கிறது. இதுக்கே இந்த போராட்டம் என்றால், ஓட்டு எண்ணிக்கை அதிகமானால் இன்னும் போராட்டம் அதிகமாக இருக்கும் என்றும், போராட்ட காலங்களில் ஒதுங்கி விடாமல் அதை எதிர்த்து தான் நிற்க வேண்டும்.

எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்ய போகிறோம் என்று சொல்ல வேண்டும். இவர்கள் செய்யாததை நாங்கள் செய்வோம் என்று சொன்னதாகவும், 10 வருடமாக 10 சதவீதம் வாங்குவதை நிறுத்துவதாக சொன்னார்கள்.டப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

40 வருடமாக கூட இருந்தும் ஏன் ஒருமுறை கூட சொல்லவில்லை? நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயமாக நம் அணி பெரிய அளவில் வெற்றி பெறும். இருந்தாலும் புதிய முகங்களையும், பழைய முகங்களையும் தேர்தலில் நிறுத்துகிறோம் என்றும், ஆர்வம் இருப்பவர்களை சேர்த்து கொள்வேன்.

இதனால் என்ன இழப்பு? அவரிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. அதற்காக வருத்தப்பட வேண்டியதாயிருக்கு. நல்ல நண்பன். 40 ஆண்டு கால நண்பன். ஏதோ ஒரு பற்று இருந்திருக்கும். ஏன் நாம் தலைவராக இருந்தால் என்னவென்று. தலைவராக நான் இருந்த போது மருத்துவமனையில் வந்து பார்த்திருக்கிறார். பேசியிருக்கிறார். இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? தலைவராக நின்று விட்டார். இந்த யூனியனை பொறுத்தவரை நாங்கள் தொண்டர்களுடன் தானிருப்போம். நான் வெற்றி பெற்றால் இதிலிருந்து 6 பேரை எடுத்து விடுவேன் என்றும், முற்றிலும் உழைக்க கூடியவர்களை வைத்து தான் இதை செய்ய வேண்டும். தேர்தல் முடிந்ததும் யாருக்கு என்ன தேவையோ அதை செய்வோம் என்று கூறினார்.

என் கூடவே இருந்து இப்படி செய்து விட்டாரே என்ற வருத்தம் தான். நாங்கள் வெற்றி பெற நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த முறையும் எனக்கு வாக்களித்து ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றால் தான் சந்தோஷம்.டப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

தகுதியான வாக்காளர்கள் பட்டியல் முடிவாகி இருக்கிறது. ஒரு வருடமாக ராஜேந்திரன் அதை பார்க்கவில்லையா?
யூனியனில் 70 ரசீது ஒரே நம்பரில் இருப்பதாக அதில் ஒரு ரசீது ஜோசப் விஜய் பெயரில் இருப்பதாகவும் இப்படி மோசடி நடக்கிறது என்று ராஜேந்திரன் குற்றச்சாட்டு கூறுவது குறித்த கேள்விக்கு, ஒரு வருடமாக அவர் இதை பார்க்காமல் என்ன செய்தார்? ஜோசப் விஜய்க்கு அவர் கட்டி இருக்கிறார். அப்போது விஜய் சார் கட்டவில்லை.‌ நான் கட்டுகிறேன்.‌ விஜய் சார் கட்டினால் வேறு யாருக்காவது கட்டுங்கள் என்று சொன்னதாகவும், 40 வருடமாக கூட இருந்து எதுவும் கற்று கொள்ளாமல் இருப்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும், ஸ்ருதிஹாசன், பாடகர் கார்த்தி எங்கள் மெம்பர். இவர்களுக்கு நான் சந்தா கட்டுகிறேன் என்றும் எந்த தேர்தலிலும் விஜய் சார் ஓட்டு போட்டதில்லை என்றும், ஆடிட்டர் சொன்னதன் பேரில் தான் ரசீது வழங்கப்படுவதாகவும், அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்ல வரவில்லை கதிரேசன் கூறினார்.

ராதாரவியின் வயது அதிகமாக இருப்பதால் அவரை வெற்றி பெற செய்து விட்டு, வேறு ஒருவரை தலைவராக்குவது குறித்த விமர்சனத்துக்கு, யூனியனை விற்க போவதில்லையே. சட்டப்படி யூனியனை விற்க முடியாது. நான் தலைவரானால் உப தலைவரை கொண்டு வரலாம். ஆனால் கதிரை அதில் கொண்டு வர முடியாது. இதில் யாரும் சோடையானவர்கள் கிடையாது. கடந்த முறை நான் சொன்னதை அவர் இப்போது தூக்கி கொண்டு பேசுகிறார். நான் நிற்கிறேன் என்று சொல்பவர்களை நிற்க கூடாது என்று முறைப்படி சொல்ல கூடாது.டப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

லியோ படத்துக்கு சின்மயி டப்பிங் பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு,
லோகேஷ் கனகராஜ் தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. பாவம் அவருக்கும் விதிமுறைகள் தெரியாது. நான் போன் பண்ணி சொன்னதும் ஒப்பு கொண்டார். யூனியனுக்கு பணம் வந்து விட்டது. அது போதும். லியோ படத்துக்கு சின்மயியை நான் பேச விட்டதாக ராஜேந்திரன் கூறுகிறார். சின்மயியை நாங்கள் பேச விடவில்லை. இரவில திருட்டு தனமாக டப்பிங் பேசியதாகவும், அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜிடம் ராதாரவி தான் பேசினார் என்று கூறினார்.டப்பிங் யூனியன் தேர்தல்..... செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைவர் ராதாரவி!

சின்மயியை இனிமேல் யூனியனில் சேர்ப்பது குறித்து, சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பிவில்லை. சந்தா கட்டாயததால் யாராக இருந்தாலும் உறுப்பினர் உரிமை இருக்காது. தான் சந்தா கட்டாயததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார். அவர் மீண்டும் வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம் என்றும் கூறினார்.

MUST READ