தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகராக இருப்பவர் சூர்யா. ஒவ்வொரு படத்துக்காகவும் உடல் எடையை ஏற்றி இறக்கி அந்தக் கதாபாத்திரத்துக்காக அசாதாரணமான அர்ப்பணிப்பை கொடுக்க கூடியவர். தற்போது இவரது 44 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயில் செட்டப்பில் சண்டை காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாம். அதற்காக பிரத்தியேகமாக ஜெயில் செட் ஒன்றினை சென்னையில் அமைத்து வருகிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா என பிரஷ் -ஆன காம்பினேஷனில் ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. எனவே ரத்த சரித்திரம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயிலில் படமாக்கப்படும் சண்டை காட்சிகளில் சூர்யா நடிப்பதால் இந்த சண்டைக் காட்சி வேற லெவலில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
- Advertisement -