- Advertisement -
தெலுங்கில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்திற்க்கு பாக் என்று தலைப்பு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை உருவாக்கினார் இயக்குனர் சுந்தர்.சி. முதல் இரண்டு பாகங்கள் ஹிட் அடித்த நிலையில் மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இருப்பினும் அரண்மனை நான்காம் பாகத்திற்கான பணிகளை தொடங்கினார் இயக்குனர் சுந்தர் சி.


படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு அரண்மனை 4 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் கோவை சரளா, யோகி பாபு, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் படத்தை தயாரித்து உள்ளன. மேலும், படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.



