கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2010 சிம்பு, திரிஷாவின் நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விடிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியோருடன் இணைந்து சமந்தா- நாக சைதன்யாவும் நடித்திருந்தனர்.
இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ட்ராக்கே வித்தியாசமாக அமைந்திருந்தது.
கௌதம் மேனன் இயக்கிய இந்த படம் வித்தியாசமான காதல் கதையாக அமைந்து காதலர்களுக்கு விருந்து படைத்தது. அதுபோல எத்தனை காதல் படங்கள் வந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும். அதன்படி கௌதம் வாசுதேவ் மேனன் மட்டுமல்லாமல் ஏ ஆர் ரஹ்மானும் மேஜிக்கை நிகழ்த்தி இன்றுவரையிலும் இந்த படத்தை பல்வேறு ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்படம் மீண்டும் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டு இத்தனை வருடங்கள் கழித்தும் அதிக வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் இன்றுடன் (பிப்ரவரி 26) 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.