Homeசெய்திகள்சினிமாபாலிவுட்டில் 4 திரைப்படங்களை தயாரிக்கும் ஞானவேல் ராஜா

பாலிவுட்டில் 4 திரைப்படங்களை தயாரிக்கும் ஞானவேல் ராஜா

-

- Advertisement -
கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார்.  சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசினார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து அமீருக்கு ஆதரவாக பேசினர். கண்டனங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், அதில் அமீர் தன்னை காயப்படுத்தி பேசியதாக அவர் குறிப்பிட்டது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.

தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மும்பையில் உள்ளாராம். அஜய் தேவ்கனை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட் புதிய படத்தை தொடங்க இருக்கும் அவர், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளாராம். கூடவே பாலிவுட்டில் ஒரே நேரத்தில் 4 படங்களுக்கான பூஜையை போட்டு தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ