Homeசெய்திகள்சினிமாநான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை - கவிஞர் வைரமுத்து

நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை – கவிஞர் வைரமுத்து

-

நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை – கவிஞர் வைரமுத்து

நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. உண்டாக்கப்படுகிற சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை - கவிஞர் வைரமுத்து

நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார்.

சென்னை பிரசாத் அரங்கில், ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுகங்களும் அவர்களோடு வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பனை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று.

இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இப்படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ள வைரமுத்து இசை தட்டை வெளியிட அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பெற்றுக் கொண்டார்.

நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை - கவிஞர் வைரமுத்து

அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கங்கை அமரன் வெளியிட்ட காணொளி தொடர்பான கேள்விக்கு, முடிந்த கதை தொடர வேண்டாம் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள் என்றார்.

 

உங்களுக்கு வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, இது குறித்துப் பேசுவது பண்பாட்டு ரீதியாக உயர்ந்தது இல்லை என்பது என் கருத்து என்று தெரிவித்தார். எங்கள் இருவருக்கமான பிரச்சனைக்கு பிறகும் 30 ஆண்டுகளாக சிறந்த பாடல்களை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை - கவிஞர் வைரமுத்து

இளையராஜாவின் சிம்பனி குறித்தான கேள்வி கேட்கப்பட்ட போது, இந்த செய்தியை நீங்கள் தவிர்க்க விரும்ப மாட்டேன் என்கிறீர்கள். நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. உண்டாக்கப்படுகிற சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன்.

 

ஆனால் காலம் சர்ச்சைகளை முடிக்க விரும்புவதில்லை என்று தெரிகிறது. சமூகம் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு அதில் குளிர்காய நினைக்கிறது. ஆனால் தனி மனிதர்கள் சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள்.

https://www.apcnewstamil.com/news/cinema-news/ilaiyaraaja-does-not-give-proper-respect-to-lyricist-says-writer-jeyamohan/87519

நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன். பாடல்களில் ஆங்கிலச்சொல் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, google என்பது பெயர்ச்சொல் அதை நீங்கள் தவிர்க்க முடியாது. சேக்ஸ்பியர் என்பதை சிகப்பிரியர் என்று இன்று மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

MUST READ