இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். அந்த அளவிற்கு இவருடைய இசை கவலைகளை மறக்க வைக்கும். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஒரு புதிய படமாக உருவாகப் போகிறது என தகவல்கள் கசிந்தது. அதன்படி இசைஞானி இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். எனவே இளையராஜாவும், மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போவதாக விழா ஒன்றும் நடத்தப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தனுஷ் தற்போது பல படங்களை பிஸியாக இருப்பதால் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளியான புதிய தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்படுவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு ஒத்து வராது என படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் கைவிடப்படுமா? அல்லது வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -