Homeசெய்திகள்சினிமா'பிரதர்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி!

‘பிரதர்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி!

-

- Advertisement -

நடிகர் ஜெயம்ரவி பிரதர் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.'பிரதர்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பிரதர். இந்த படத்தினை எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ், சீதா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படமானது வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் அதை நாளில் இப்படத்தின் டீசரும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மக்காமிஷி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் செம டிரண்டாகி வந்தது. இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளனர் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே சமயம் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ