ராகவா லாரன்ஸ் நடிப்பிலும் பி .வாசு இயக்கத்திலும் சமீபத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்த இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான நிலையில் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேசமயம் ராகவா லாரன்ஸும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி விட்டார். அதன்படி ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். பாண்டிச்சேரி பகுதியில் இந்த படத்தை படமாக்க போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா 1, காஞ்சனா 2 காஞ்சனா 3 போன்ற படங்களை நடித்து இயக்கியிருந்தார். காமெடி கலந்த பேய் படங்களாக உருவாகியிருந்த இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் காமெடியில் ரசிகர்களை கவர்ந்தது.

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள திரைப்படம் பேய் படமா அல்லது வேறு மாதிரியான புது கதையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.