spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு குறைவு... நடிகை காஜல் அகர்வால் விளக்கம்...

திருமணத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு குறைவு… நடிகை காஜல் அகர்வால் விளக்கம்…

-

- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், உள்பட அனைத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனிடையே  தொழில் அதிபர் கௌதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குடும்ப வாழ்க்கையை கவனித்துக்கொண்டு சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கிறார்.
அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார்.
இதைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால், தெலுங்கில் திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு முன்பு போல் படவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

MUST READ