அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு கமல்ஹாசன் தான் காரணம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் தயாரிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க சிவகார்த்திகேயன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராகுல் போஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை விட இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடியை தட்டிச் சென்றது. அடுத்தது தற்போது வரை தமிழ்நாட்டின் மட்டும் கிட்டத்தட்ட 77 கோடி வசூல் செய்துள்ளதாகவும் உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசன் தான் காரணம் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அமரன் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன், முதலில் அமரன் திரைப்படத்தை பார்த்துள்ளார். எங்கெங்கு தவறுகள் இருக்கிறதோ அதை குறித்துக் கொண்டு படக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தினாராம். அதன் பின்னர் தவறுகளை சரி செய்யுமாறு வலியுறுத்தினாராம். எனவே கமல்ஹாசனின் அறிவுரையின்படி படக்குழுவினர் தவறுகளை சரி செய்ததனால் தான் அமரன் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.