சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த நடிகரின் மனைவி
வெளிநாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவின் உடல் பெங்களூரு கொண்டுவரப்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரனான விஜய் ராகவேந்திர குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கன்னட திரையுலகில் படங்களில் பிஸியான 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னாடி நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் தான் நடித்து வந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஓய்விற்காக குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டிற்கு ராகவேந்திர மனைவியுடன் சென்ற நிலையில், ஸ்பந்தனாவுக்கு அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஸ்பந்தனாவின் ஊடல் விமானத்தின் மூலமாக பெங்களூரு கொண்டுவரப்பட்டது நடிகர் ராகவேந்திரா வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலர் திரளாக வந்து ஸ்பந்தனாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை பெங்களூருவில் ஸ்பந்தனாவின் முதல் தகனம் செய்யப்பட உள்ளது. விஜய் ராகவேந்திரா மற்றும் ஸ்பந்தனா தம்பதிகள் தங்களது 16-வது திருமண தினத்தை இன்னும் 19 நாட்களில் கொண்டாட பிரம்மாண்ட ஏற்பாடுகளை குடும்பத்தாருடன் செய்து வந்த நிலையில் 44 வயதில் ஸ்பந்தனாவின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.