ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் இவர் இயக்கிய பீமா, அஞ்சான், வாரியர் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனிடையில் திருப்பதி பிரதர்ஸ் என்னும் விநியோக நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை விநியோகித்தும் வந்தார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல வெற்றிக்கு போராடி வரும் லிங்குசாமி தன்னுடைய அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார். இந்நிலையில் தான் இவருடைய அடுத்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க இருப்பதாகவும், படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தற்போது லிங்குசாமி – சூரி காம்போவில் உருவாகும் புதிய படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.