Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிக்கும் எம்புரான்... அமெரிக்காவில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

மோகன்லால் நடிக்கும் எம்புரான்… அமெரிக்காவில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு…

-

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள திரையுலகம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாறன். இவர் மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் சலார் திரைப்படம் வௌியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு மட்டுமன்றி அண்மையில் இயக்கத்திலும் இறங்கினார் நடிகர் பிருத்விராஜ். இவரது இயக்கத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர்.

பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் நாளுடன் இணைந்து விவேக் ஓபராய் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்திற்கு எம்புரான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நடிகர் டொவினா தாமஸூம் கலந்து கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

MUST READ