Homeசெய்திகள்சினிமாமீண்டும் வில்லனாக களமிறங்கும் மிஷ்கின்..... எந்த படத்தில் தெரியுமா?

மீண்டும் வில்லனாக களமிறங்கும் மிஷ்கின்….. எந்த படத்தில் தெரியுமா?

-

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மிஸ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் இந்திய அளவில் பிரபலமானார்.

அதன் பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.அனிருத் இதற்கு இசையமைக்க உள்ளார்.
ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக , இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் மிஸ்கின் நடிக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இயக்குனர் மிஷ்கின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் விஜயின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் அது வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

MUST READ