Homeசெய்திகள்சினிமாபுரட்சிக் கலைஞரும் புரட்சி நாயகனும்..... வைரலாகும் நடிகர் அதர்வாவின் பதிவு!

புரட்சிக் கலைஞரும் புரட்சி நாயகனும்….. வைரலாகும் நடிகர் அதர்வாவின் பதிவு!

-

- Advertisement -

புரட்சிக் கலைஞரும் புரட்சி நாயகனும்..... வைரலாகும் நடிகர் அதர்வாவின் பதிவு!நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் வெளியான மத்தகம் எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அதர்வா, அறிமுக இயக்குனர் பர்நீஷ் இயக்கத்தில் ஒத்தைக்கு ஒத்த எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஈட்டி படத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் தியாகராஜன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் அதர்வா தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் முரளி ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ” நினைவுகள் உங்கள் முகத்தில் புன்னகையை மட்டும் தரும். என்றென்றும் நம் இதயங்களில்” என்று பதிவிட்டுள்ளார்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மற்றும் புரட்சி நாயகன் முரளி ஆகிய இருவரின் மறைவிற்குப் பிறகு அதர்வா பகிர்ந்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 1994 ஆம் ஆண்டு என் ஆசை மச்சான் எனும் திரைப்படத்தில் விஜயகாந்தும் முரளியும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டங்களில் இருவருமே பலரின் ஃபேவரிட் நடிகர்களாக இருந்தனர். இவர்களின் படங்களும், பாடல்களும் இன்றுவரையிலும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும்.

MUST READ