Homeசெய்திகள்சினிமாமீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் ராஷ்மிகா?

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் ராஷ்மிகா?

-

நயன்தாரா – விக்னேஷ் சிவன், தீபிகா படுகோன் – ரன்வீர் சிங், அனுஷ்கா – விராட் இந்த வரிசையில் காதல் ஜோடிகளாகவும், டோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களாகவும் வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா அறிமுகமானது கன்னட சினிமாவாக இருந்தாலும், அவர் முன்னணி நடிகையாக வலம் வருவது தெலுங்கு சினிமாவில்தான். தற்போது இந்தியில் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இந்தியிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் தான் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அறிமுகமான முதல் படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. ஆனால், இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது என அடிக்கடி சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டனர்.

இந்நிலையில், மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது, விஜய் நடிக்கும் 14-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். இவர் நானியை வைத்து ஷ்யாம் சிங்கா ராய் படத்தை இயக்கியவர் ஆவார். தற்போது, புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ