Homeசெய்திகள்சினிமாகாதலனை கரம் பிடித்த சசிகுமார் பட நடிகை.... வைரலாகும் புகைப்படங்கள்!

காதலனை கரம் பிடித்த சசிகுமார் பட நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

சசிகுமார் பட நடிகை அபிநயாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.காதலனை கரம் பிடித்த சசிகுமார் பட நடிகை.... வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிநயா. அதை தொடர்ந்து இவர் ஈசன், வீரம், தனி ஒருவன், ஏழாம் அறிவு, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். கடைசியாக இவர் ஆதி நடிப்பில் வெளியான சப்தம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். காதலனை கரம் பிடித்த சசிகுமார் பட நடிகை.... வைரலாகும் புகைப்படங்கள்!அடுத்தது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நடிகை அபிநயா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தான் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நெருங்கிய நண்பர் வகிசனா கார்த்திக் என்பவரை கிட்டத்தட்ட 15 வருடங்களாக காதலித்து வருவதாக கூறியிருந்தார். தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது அபிநயா – வகிசனாவின் திருமணம் ஐதராபாத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 16) இவர்களின் திருமணம் நடந்து முடிந்த நிலையில் ரசிகர்கள் இந்த புதுமண தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இத்துடன் நடிகை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ