நடிகை ஸ்ருதிஹாசன் கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராகவு,ம் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் தனுஷ், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். இது தவிர, இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் இவர் சத்யராஜுக்கு மகளாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. அதேசமயம் இப்படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், இப்படம் குறித்து புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி கூலி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.