நடிகை சிம்ரன், விஜயின் அரசியல் வருகை குறித்தும், அஜித்தின் பத்ம பூஷன் விருது குறித்தும் பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சிம்ரன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர் இன்றுவரையிலும் பலரின் பேவரைட் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றுள்ளார் சிம்ரன். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிம்ரனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஆல் தி பெஸ்ட்” என்று பதிலளித்துள்ளார். அதைத்தொடர்ந்து அஜித் பத்ம பூஷன் விருது வென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர் அதற்கு தகுதியானவர்” என்று பதிலளித்துள்ளார்.

நடிகை சிம்ரன், விஜயுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் அஜித்துடன் இணைந்து வாலி, உன்னைக் கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.