நடிகர் விஜய் கோட் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு நாளை (செப்டம்பர் 14) வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் விஜயிடம் உதவி ஒன்றினை கேட்டிருக்கிறார். அதாவது நடிகர் விஜய்யை வைத்து புதிய படம் தயாரிக்க விரும்புவதாக நடிகை சிம்ரன் விஜயிடம் கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு விஜய் மிகவும் எதார்த்தமாக பதில் அளித்துள்ளார். “தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்வது சாதாரண விஷயம் இல்லை. பல பிரச்சனைகள் ஏற்படும். அதனை உங்களால் சமாளிக்க முடியாது” என்று பதிலளித்துள்ளார் விஜய்.
ஏற்கனவே விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அதிலும் தளபதி 69 திரைப்படத்தை வேறொரு பிரபல நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயும், சிம்ரனும் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்தது இவர்களின் கூட்டணி தளபதி 69 திரைப்படத்தில் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.