சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைய இருக்கும் புதிய படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, மிஸ்கின், சரிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
‘மாவீரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். விரைவில் துவங்க இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
படத்திற்காக இரு கதாநாயகிகள் பரிசீலனையில் இருக்கின்றனராம். நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சீதாராமம் படத்தின் நாயகி மிருனாள் தாகூர் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் யாரேனும் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
எனவே படம் பான் இந்தியா அளவில் உருவாகும் என்று தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.