சமூக வலைத்தளங்களில் இருந்து சில நாட்கள் ஓய்வெடுக்க போவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
இதற்கிடையில் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத் இடங்களில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது அருமை சகோதர சகோதரிகளே! நான் சிறிது காலம் சோசியல் மீடியாக்களில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளேன். எனது படங்களின் அப்டேட்களை என் டீம் இந்த கணக்கின் மூலம் வெளியிடுவர்” என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக தீவிர பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் இந்த ஓய்வை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon 👍😊P.S: All updates on the films will be shared here by my team. pic.twitter.com/Nf4fdqXRTy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 30, 2023