spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅயோத்தி குடமுழுக்கில் பங்கேற்ற ரஜினிக்கு சிறப்பு பிரசாதம்

அயோத்தி குடமுழுக்கில் பங்கேற்ற ரஜினிக்கு சிறப்பு பிரசாதம்

-

- Advertisement -
கடந்த ஜனவரி மாதம் மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் உள்ள பிரபலங்கள், நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், மக்களும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், அதற்கு ஏற்றபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மோலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், குடமுழுக்கில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு, அறக்கட்டளை சார்பில் இந்த சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால், அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ரா.அர்ஜூனமூர்த்தி, தமிழ்நாடு, கேரள மற்றும் புதுச்சேரி ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பு செயலாளர் ஆகியோர் லதா ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, பிரசாதம் வழங்கினார்.

MUST READ