spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் 'சூர்யா 44'!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் ‘சூர்யா 44’!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தான் கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா 44 எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் 'சூர்யா 44'!இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு அதை தொடர்ந்து ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. காதல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் 'சூர்யா 44'!அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் பேட்டி ஒன்றில் இப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா 44 திரைப்படத்தை 2025 மார்ச் 27 அல்லது 28ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ