சூர்யா 45 படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தினை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா சூர்யாவுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா 45 படத்தின் பூஜை நாளை (நவம்பர் 27) கோவையில் நடைபெற இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அத்துடன் நவம்பர் 28 இல் இதன் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கப்படலாம் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.