spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் சூர்யா - திரிஷா காம்போ.... எந்த படத்தில் தெரியுமா?

மீண்டும் இணையும் சூர்யா – திரிஷா காம்போ…. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் சூர்யா, கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா 44 எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மீண்டும் இணையும் சூர்யா - திரிஷா காம்போ.... எந்த படத்தில் தெரியுமா?அதே சமயம் நடிகை திரிஷா தற்போது செம பிசியான நடிகையாக வலம் வருகிறார். அதன்படி தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் திரிஷா.

இந்நிலையில் சூர்யா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மௌனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இணையும் சூர்யா - திரிஷா காம்போ.... எந்த படத்தில் தெரியுமா?இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மேலும் இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்க உள்ளார். மேலும் சூர்யா 45 படமானது கிராமத்து கதைக்களத்தில் ஃபேண்டஸி கதைக் களத்தில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ