ராம்சரண் – ஜான்வி கூட்டணியில் புதிய படம்… அடுத்த மாதம் படப்பிடிப்பு…
- Advertisement -
ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இத்திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

ராம் சரண் புச்சிபாபு இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார். இது ராம்சரண் நடிக்கும் 16-வது படமாகும். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். மேலும் இந்த படம் விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாகவும் ராம்சரண் இதில் விளையாட்டு வீரராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்பேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், விரைவில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.