கடந்த அக்டோபர் 17ஆம் தேதி துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களைப் போல் இந்தப் படத்திலும் வலுவான திரைக்கதையை கொடுத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார் மாரி செல்வராஜ்.
அதே சமயம் இந்த படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்த துருவ் விக்ரமுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்திருப்பதாகவும் உலக அளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதால் இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அடுத்தது துருவின் தந்தை விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட ரூ.40 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி வரும் பட்சத்தில், சமூக வலைதளங்களில் பலரும் துருவ் விக்ரம், வசூலில் தனது அப்பாவை ஓவர் டேக் செய்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


