Homeசெய்திகள்சினிமாஅக்ஷய் குமாரிடம் கதை சொன்ன வெங்கட் பிரபு!

அக்ஷய் குமாரிடம் கதை சொன்ன வெங்கட் பிரபு!

-

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரிடம் கதை சொன்னதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.அக்ஷய் குமாரிடம் கதை சொன்ன வெங்கட் பிரபு!வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் சென்னை 600028, கோவா, சரோஜா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது அஜித் நடிப்பில் இவர் இயக்கியிருந்த மங்காத்தா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் தன்னுடைய கமிட்மெண்டை முடித்த பின்னர்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷய் குமாரிடம் கதை சொன்ன வெங்கட் பிரபு!இதற்கிடையில் வெங்கட் பிரபு, அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறாராம் வெங்கட் பிரபு. எனவே இனிவரும் நாட்களில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்ஃபிரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ