நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தி கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் புதிய கீதை படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா, விஜயின் கோட் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி படப் பிடிப்பானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் (ஜூன்) 22 விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே அவர் பாடிய விசில் போடு பாடல் வெளியான நிலையில் அடுத்ததாக விஜயின் குரலில் உருவாகியுள்ள மற்றொரு பாடல் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், ஏற்கனவே நடிகர் விஜய் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என்று சொல்லப்பட்டது.
ஆகவே மீதமுள்ள டப்பிங் பணிகளை ஜூலை மாதத்தில் முடிப்பார் என்று தகவல் கசிந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி நடிகர் விஜய் முழு டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துவிட்டதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இதை தொடர்ந்து தளபதி 69 படத்திற்கு தயாராக இருக்கிறார் விஜய்.
- Advertisement -