spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகை நடுக்கத்துடன் குரலில் தடுமாற்றத்துடன் பேசிய விஷால்..... காரணம் என்ன?

கை நடுக்கத்துடன் குரலில் தடுமாற்றத்துடன் பேசிய விஷால்….. காரணம் என்ன?

-

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடந்தாண்டு ரத்னம் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கை நடுக்கத்துடன் குரலில் தடுமாற்றத்துடன் பேசிய விஷால்..... காரணம் என்ன?அதைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சுந்தர். சி-யின் இயக்கத்திலும் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி இருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால், குரலில் தடுமாற்றத்டனும் கை நடுக்கத்துடனும் பேசினார். இதனால் பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விஷாலுக்கு ஹய் ஃபீவர் இருப்பதன் காரணமாக அந்த காய்ச்சலையும் அவர் பொருட்படுத்தாமல் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கிறார் என்று கூறினார். இதைக் கண்ட ரசிகர்கள் விஷாலை கண்டு பரிதாபப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ