டிமான்ட்டி காலனி 3 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ எனும் திரைப்படம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்த படம் ஹாரர் – திரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து அஜய் ஞானமுத்து – அருள்நிதி கூட்டணியில் கடந்த 2024 இல் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படமும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இதன் மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. ‘டிமான்ட்டி காலனி 3 – THE END IS TOO FAR‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், மியா ஜார்ஜ், விஜே அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை கோல்ட் மைன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த படத்தை 2026 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதியை இரட்டை கதாபாத்திரங்களில் காட்டி இருந்தனர். அதேபோல் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்திலும் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


