Homeசெய்திகள்சினிமாஆளுங்கட்சியை பாராட்டினால் தலைவராக முடியாது.... விஜயின் அரசியல் குறித்து பார்த்திபன் கருத்து!

ஆளுங்கட்சியை பாராட்டினால் தலைவராக முடியாது…. விஜயின் அரசியல் குறித்து பார்த்திபன் கருத்து!

-

- Advertisement -

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆளுங்கட்சியை பாராட்டினால் தலைவராக முடியாது.... விஜயின் அரசியல் குறித்து பார்த்திபன் கருத்து!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதே சமயம் ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு திரைப் பிரபலங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதாவது பார்த்திபன் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை அவருடைய அலுவலகத்தில் சென்று சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், விஜயின் அரசியல் குறித்து பேசினார்.ஆளுங்கட்சியை பாராட்டினால் தலைவராக முடியாது.... விஜயின் அரசியல் குறித்து பார்த்திபன் கருத்து! அவர் பேசியதாவது, “புதிதாக அரசியலுக்கு வருபவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. விஜய் அவருடைய பாதையில் செல்லட்டும். பொதுவாக அரசியலில் பெரிய இடத்திற்கு செல்ல தடைகள் இல்லாமல் இருக்காது. ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு பெரிய விஷயமோ அதே போல் தடைகளை தாண்டி செல்வது உண்மையான தலைவனுக்கு அழகு. ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த இடத்திற்கு வர முடியும். எம்ஜிஆரும் கருணாநிதியும் அதை தான் செய்தார்கள். விமர்சிக்காமல் ஆளுங்கட்சியை பாராட்டினால் தலைவராக முடியாது. இது நான் விஜய் ஆதரவாக சொல்கிறேன் என்பது அர்த்தம் இல்லை. பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்க முடியாத ஒரு விஷயம். அதில் எதிர் கருத்துக்கள் சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ