Homeசெய்திகள்"இனிமே என்னோட KK நகர் ஆபிஸ்ல மதிய சாப்பாடு போடப்போறேன்" - நடிகர் புகழ் பேட்டி

“இனிமே என்னோட KK நகர் ஆபிஸ்ல மதிய சாப்பாடு போடப்போறேன்” – நடிகர் புகழ் பேட்டி

-

- Advertisement -
இனி வரும் நாட்களில் கேகே நகரில் உள்ள தனது அலுவலகத்தில் மதிய உணவு வழக்கமாக போடப்படும் என நகைச்சுவை நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் அவரது நினைவிடத்திற்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலமும், நகைச்சுவை நடிகருமான புகழ் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரும் நாட்களில் கேகே நகரில் உள்ள தனது அலுவலகத்தில் மதிய உணவு வழக்கமாக வழங்கப்படும் என தெரிவித்தார். அவர் செய்த நல்ல காரியங்கரை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

MUST READ