spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்

தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்

-

- Advertisement -

திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாதுரியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.

தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்
திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலையில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் தாஸ் பேருந்திலிருந்து புகை வருவதைக் கண்ட உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

we-r-hiring

அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 30 பயணிகளும் உடனடியாக பேருந்தை விட்டு பத்திரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ