Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!

இந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!

-

- Advertisement -

 

இந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை கடந்த 2023- 24 நிதியாண்டில் இந்தியாவில் தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்தம் ஐபோன்களில் 7- ல் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களில் மதிப்பு ரூபாய் 1,16,521 கோடியாக உயர்ந்துள்ளதாக பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தயாரிக்கப்படும் மொத்த ஐபோன்களில் 67- ஐ சென்னை அருகே உள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

சென்னை அருகே பெகட்ரான் அமைத்த ஆலையில் 17% ஐபோன்களும், விஸ்ட்ரான் ஆலையில் 16% ஐபோன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான ஐபோன்களை தயாரித்து வரும் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு தயாரிப்பு பணியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு ஐபோன் தயாரிப்பை மாற்றும் திட்டப்படியே இந்தியாவில் 14% ஐபோன்களைத் தயாரித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதனிடையே, தமிழ்நாட்டில் ஐபோன் தயாரித்து வரும் பெகட்ரான் தொழிற்சாலையை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

தைவானைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஆலையில் ஐபோன்களைத் தயாரித்து வருகிறது. ஏற்கனவே, பெகட்ரானுடன் இணைந்து புதிய ஆலையை ஓசூரில் டாடா குழுமம் அமைக்கும் நிலையில் சென்னை ஆலையை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

MUST READ