Homeசெய்திகள்இந்தியாபாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது - திருச்சி சிவா பேட்டி

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி

-

- Advertisement -

அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக  வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன என்று மாநிலங்களவை தி.மு.க குழு தலைவர் திருச்சி சிவா பேட்டி.

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது - திருச்சி சிவா பேட்டிநேற்று முன்தினம் அவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்று தான் இதனை ஏற்கிறோம்.

ஆனால், காங்கிரசை விமர்சிப்பதாக அமித்ஷா கூறிய கருத்துக்களும், அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறியிருப்பது ஏற்புடையதல்ல. முக்கிய தலைவர்களில் ஒருவரான அம்பேத்கர் அரசியல் சாசன சட்டம் உருவாவதற்கு முக்கிய பங்கு உண்டு.

1949 நவம்பர் மாதம் அம்பேத்கர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது. ஏழை எளியவர்களுக்காக உழைத்தவர் அம்பேத்கர். அவரை கடவுளாகவும், பின்பற்றுபவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது - திருச்சி சிவா பேட்டிபொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் எவரும் அம்பேத்கரை அவருக்கு பதிலாக என்று குறிப்பிட மாட்டார்கள். ஆனால் அமித்ஷா அது போன்று பேசியது தான் அம்பேத்கரை பின்பற்றுபவர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அச்சமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களும் பதிலுக்கு தெரு சண்டை போன்ற ஒரு சூழலை உருவாக்கினார்கள்.

பாஜகவின் அணுகுமுறை காரணமாக அரசியல் தரம் வெளியில் குறைந்திருப்பது போல நாடாளுமன்றத்திலும் உறைய தொடங்கியுள்ளது. மீண்டும் அவை கூடும்போது கட்டாயம் இந்த பிரச்சனையை எழுப்புவோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சார்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மரபு மற்றும் மாண்புகள் பாஜகவால் தகர்க்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது பாஜக உறுப்பினர் ஒருவர் காயமடைந்திருப்பது அதற்கு ராகுல் காந்தியை குற்றம் சாட்டுவதும் ராகுல் காந்தி மீது கலங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்படுகிறது.

MUST READ