கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்- மம்தா காட்டம்
ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் சட்டப்பூர்வ பரிவர்த்தனையை திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், போதுமான அளவில் மற்ற விகிதாசாரத்தில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்து, பின்னர் 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.
பெரும்பாலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன்பு வெளியிடப்பட்டவை. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சாதாரணமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய இதர குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளதாகவும், இதனால் இந்திய ரிசர்வ் வங்கியின் “தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்” படி, 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
So it wasn’t ₹2000 dhamaka but a billion dollar dhoka to a billion Indians . Wake up my dear brothers and sisters. The suffering we have endured due to demonetisation can’t be forgotten and those who inflicted that suffering shouldn’t be forgiven.
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2023
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ரூ.2000 நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல, கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல், மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை. அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கக்கூடாது” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
He who creates, he who destroys. pic.twitter.com/xc5BP8qeL7
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 19, 2023
இதேபோல் எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசே அழிக்கிறது” என விமர்சித்துள்ளார்.