Homeசெய்திகள்இந்தியாகொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது

கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது

-

- Advertisement -

கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது

கொரோனவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேரை சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்துவருகிறது. நிபா வைரஸ் தொற்றைத் தடுக்க கோழிக்கோட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும், வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக – கேரளா எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடியில் கண்காணிப்பை தீவிரபடுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி கேரளாவில் இருந்து வருவோரை தமிழக எல்லையில் கண்காணித்து, அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம், கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் 2-3 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. ஆனால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவீதம் இருக்கும் என எச்சரித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் வெளவால்களிடம் இருந்து பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.

MUST READ