- Advertisement -

வட மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பனி நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, 170- க்கும் மேற்பட்ட விமானங்கள், 20 ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் உட்பட 53 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக, வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.