நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை பாஜகவுக்கு தன்ப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மோடி இன்று இரவு மூன்றாவது முறையாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு மோடிக்கு, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளது குறிப்பிடதக்கது. இவ்விழாவில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அம்பானி , ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.